வெள்ளி, ஜூன் 19, 2009

"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.



இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


பூவுலகு இதழுக்கான கொடை விவரங்கள்:

புரவலர் கொடை: ரூ. 1,000/-

ஐந்தாண்டு கொடை: ரூ.500/-

ஆண்டு கொடை: ரூ.100/-

தொகையை “Poovulagin Nanbargal” என்ற பெயருக்கு காசோலை அல்லது வரைவோலையை எடுத்து பூவுலகின் நண்பர்கள், A-2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

2 கருத்துகள்:

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

இந்தியாவிற்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு இதழை அனுப்ப இயலாது. ஆனால் இதழ் முழுமையாக வலையேற்றம் செய்யப்படும், இன்னும் சிறிது நாளில்.

மாநிலத்தமிழ்ச்சங்கம் சொன்னது…

தோழர்களுக்கு,
வணக்கம். கீற்றில் தங்கள் இதழைப் படித்து வருகிறேன்... தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. பூவுலகு இதழைப் பெற விரும்புகிறேன்.. மேற்கண்ட முகவரியுடன் தங்கள் கைப்பேசி எண்ணையும் இணைத்தால் பணம் அனுப்பிட ஏதுவாக இருக்கும். வங்கிக் கணக்கு எண் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் வெளியிடுங்கள். இணையத்தின் வழித் தொகை செலுத்திவிடுகிறேன்...

கருத்துரையிடுக