செவ்வாய், பிப்ரவரி 28, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்தால் மின்தட்டுப்பாடு நீங்குமா..?


இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில்
அக்கறை கொண்ட அனைவருக்கும்...

கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளம் அணுமின் திட்டம் நமது மின் தட்டுப்பாட்டை தீர்த்துவிடும் என்று நம்பும் மிகச்சிறு அளவிலான நண்பர்களின் கவனத்திற்கு கீழ்க்கண்ட அம்சங்களை அளிக்கிறோம்:



கூடங்குளம் அணுமின் திட்டம் நமது மின்தேவைகள் அனைத்தையும் தீர்த்துவிடும் என்ற தவறான நம்பிக்கை திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கூடங்குளம் அணுஉலை (முதல் யூனிட்) 1000 மெகாவாட் மின்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் உலகில் எந்த அணுமின் உலையும் திட்டமிட்ட உற்பத்தி அளவை எட்டியதே இல்லை. திட்டமிடப்பட்ட மின் உற்பத்தியில் சுமார் 40% மட்டுமே உலக அளவில் அணுமின் உலைகளின் உற்பத்தி திறனாக உள்ளது. கூடங்குளம் அணுமின் உலை என்பது புதிதாக இருப்பதால் மிக அதிக அளவாக 70% சதவீத உற்பத்தி திறனை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது சுமார் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இந்த மின்சாரத்திலிருந்தே, இந்த மின் உலைக்கு தேவையான குளிர்விக்கும் இயந்திரங்கள், தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட இயந்திரங்களுக்கு சுமார் 75 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். மீதி இருப்பது 625 மெகாவாட் மின்சாரம். இதில் தமிழ்நாட்டிற்கு 45% அதாவது 280 மெகாவாட் மின்சாரம் கிடைக்கலாம். இந்த மின்சாரத்தை பயனீட்டாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இடையிலான போக்குவரத்து இழப்பு 20% ஆகும். (தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் இந்த இழப்பு சுமார் 32% வரை உள்ளது) 280 மெகாவாட்டில் 20%-ஐ கழித்துவிட்டால் சுமார் 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடங்குளம் அணுமின் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவும் கூட கூடங்குளம் அணுமின் திட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தித் திறனில் 70% உற்பத்தியை செய்யும் நிலையில்தான்.

வெறும் 220 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு நம் எதிர்காலத்தின் நலன்களை பணயம் வைக்க வேண்டுமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.

அடுத்ததாக கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்ற தவறான நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது.  மத்திய அரசின் நிபுணர் குழு, கூடங்குளம் அணுஉலை 100% பாதுகாப்பானது என்றுஅறிவித்துள்ளது. அப்படி என்றால், கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்க முடியாது என்று அந்த அணுஉலையை விற்பனை செய்த ரஷ்ய நாட்டு நிறுவனம் கூறுவது ஏன். ஏனெனில் அணுஉலை என்பது ஒரு இயந்திரம் என்பதும், பழுதே ஆகாத ஒரு இயந்திரத்தை வடிவமைக்கவே முடியாது என்பதும் அந்த ரஷ்ய நிறுவனத்திற்கு தெரியும். அதனால்தான் அந்த நிறுவனம் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பேற்க முடியாது என்று மறுத்துவிட்டது. கூடங்குளம் அணுஉலையில் விபத்தேதும் ஏற்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும். 

ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 5,00,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அணுஉலையை மூடுவதற்கே சுமார் 75,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இதற்கு சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் தெரிகிறது. 

எனவே மேற்கண்ட கருத்துகளை நினைவில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் அழைப்பு விடுக்கிறோம். பரவலாக்கப்பட்ட மின்உற்பத்தி மட்டுமே நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும் பரவலாக்கப்பட்ட மின்உற்பத்தி முறைகளே நீடித்து நிற்கும். எனவே இதற்கேற்ற மின் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.  பிரபல அமெரிக்க பொருளியல் நிபுணர் ஜெரிமி ரிப்கின், பசுமை ஆற்றலே மூன்றாம் தொழிற் புரட்சியை தலைமை தாங்கும் என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். 

நீடித்து நிலைக்கும் ஆற்றலை அனைவருக்கும் வழங்குவதற்கான ஆண்டாக ஐ.நா. அவையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த (2012) ஆண்டில் நம் மின் கொள்கைகளை மறு ஆய்வு செய்யுமாறு அனைவரும் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

-பூவுலகின் நண்பர்கள்.

To all the people who are “concerned for the development of India in general and 
Tamil Nadu in particular

This appeal is being made in the background of the central govt. pushing to open the Koodankulam Nuclear Power Plant (KKNPP) and a very minor section of the public thinking that KKNPP will solve the electricity requirement of our state. 

At this juncture we thought it is appropriate to present some facts and we present before you. 

To break the first myth that KKNPP will solve the electricity requirements of our state. 
The installed capacity of the KKNPP is 1,000MW (1st unit). Generally the PLF( Plant Load Factor) for Indian Nuclear Power plants is 40% only, however taking KKNPP as a new reactor we can consider the PLF for KKNPP @ 70%, which means it will produce 700MW (Out of 1000 MW as installed capacity). Out of this 700Mw about 75MW will be internal consumption for their cooling systems, desalination plants etc…that makes the available electricity as 625MW. Out of this Tamil Nadu will get a share of 45% that will give Tamil Nadu 280MW. TN has got a AT&C loss of 20% (India’s official AT&C loss is 32%) and after deducting this we will get only 220MW roughly. All these are statistics and all of us know very well how long it will take to bring the operating efficiency of any machine to 70%. 


To get just 220MW do we need to pledge the future of our generations?

2nd Myth: The Koodankulam reactor is safe;  If the koodankulam reactor is safe 100% as stated by the committees appointed by the central govt, then why the Russian company that supplied the reactor is not ready to accept the Liability Cause. This clearly shows that they very well know that “Reactor is a Machine” and there is no machine in this world that is “Failure-proof” and all machines are bound to fail. But in this case of the reactor, if there is any failure then the results will be catastrophic. For a small information, the Economic loss due to the accident in Fukushima is 5,00,000 crore and the cost of de-commissioning the reactors is 75,000 crore and will take about 30-40 years. 

We appeal to all of you to appeal to the government to review its electricity policy on the whole. We suggest the government to take up “Distributed Electricity Generation” as the model for our future electricity needs and also to have a sustainable energy. We would also like to quote Economist JeremyRifkin stating that Green energy will lead the third Industrial revolution. We request you to appeal to the govt to review the over-all energy policy in this UN “Year of Sustainable energy for all”.

 
With Warm Regards,

For Poovulagin Nanbargal



1 கருத்து:

கோ.திருநாவுக்கரசு சொன்னது…

மின்வெட்டு மத்திய அரசின் சதியே.
1.தமிழ்நாடு மிகப்பெரிய மின்வெட்டில் பாதிக்கப்பட்டுளது.அனைத்து தொழில்,வேளாண்மை,வணிகம் சார்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுளனர்.இந்த மின்வெட்டை போக்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசின் போக்கை இம்மன்றம் மிகவும் வெறுப்போடு கணிக்கின்றது. தங்களின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் மீது பலவந்தமாக திணிக்கும் இந்த முயற்சி மிக்வும் வெறுக்கத் தக்கது ,மக்கள் குடியரசுக்கு கேவலம் தருவது என இம்மன்றம் கண்டனம் செய்கின்றது.
2.மகாத்மாவை மறக்கலாமா?
மக்களின் துயரத்தில் எவ்வித பங்கும் ஆற்றாத மத்திய அமைச்சர்கள் கூடங்குளத்தில் தங்கள் உரிமைக்காக உண்னாவிரதப்போராட்டம் நட்த்தும் மக்களை “இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் “ என்று தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூறும் திரு G.K.வாசனின் பாசிச சிந்தனையை வன்மையாக இம்மன்றம் கண்டிக்கிறது.
3. சுமார் 40 நீர்மின் நிலையங்களை இயக்கும் ஆறுகள், தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்றால் மழைநீர் பெருவது, ஆண்டில ஐந்துமாதம் வீசும் காற்று ஆகியன தமிழகம் பெற்றிருக்கும் மிகப்பெரிய இயற்கைச் செல்வங்கள்.
இந்த செல்வங்களை முறையாக பயன்படுத்தி நமது சக்தித்தேவைகளை சமாளிக்க முடிந்தால் அந்த வளர்ச்சி நீடிக்கும்.சூழல் கேடு ஏற்படாது.எனவே தற்போதைய மின்சாரக் கொள்கையை மறுபரிச்சீலனை செய்யுமாறு தமிழக் அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.
4.இந்தியாவின் காற்றுச்செல்வம் 270,000மெகாவா ட் திறன் உள்ளது என கணிக்கப்படுகின்றது.இதில் தமிழகம் பெருவாரியான காற்றுவீச்சை கொண்ட்து எனக்கண்டுள்ளார்கள்.எனவே காற்றாலைகளை பெரிய அளவில் நாம் பயன்படுத்தவேண்டும்.காற்றுள்ள போது தூற்றும் வழிமுறைகளும் உள்ளன.
5. மறு நீரேற்று வசதிகள். அணையில் இருந்து கீழ் இறங்கிய நீரை மீண்டும் அணைக்கே நீரேற்றிகளின் மூலம் ஏற்றி சேமித்து பின்னர் தேவைப்படும்போது நீர்மின்சாரம் தயாரிப்பது ஒரு முறை.(PUMPED STORAGE METHOD) இதற்கு வசதியான நில அமைப்பு தேவை. இய்ற்கையின் இரண்டாவது கொடை என்று கூறவேண்டும்.சுமார் 100,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க தேவையான வசதியை கட்டியமைக்க பொருத்தமான வசதிகள் உள்ளன. எனவே காற்று கடுமையாக வீசும் காலத்தில் இந்த நீரேற்றுவசதிகளில் நாம் சக்தியை சேமிக்கவேண்டும். நீர்ப்பாசனப்பகுதியில் நடைபெறும் வேளாண்மையையும் நாம் சிறப்படையச் செய்யமுடியும். 6. அங்கக எரிவளி ஆற்றல்.
தமிழகத்தில் பலவகையான அங்க்க ஆற்றல்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட்ன.அரசின் ஆதரவும் ,பொருளுதவியும் கிடைத்தால் தமிழக் விவசாயிகள் தமிழகத்தின் உண்மையான பசுமைப்புரட்சியை துவக்கிவிடுவார்கள்.இந்த மின்சார உற்பத்தியில் வெளியாகும் கழிவு வயகளுக்கு நல்ல உரம்.விலையுயர்ந்த ரசாயன உரங்கள் இனி தேவைப்படாது. தாய்மண் குளிரும்.பசுமை பாரெங்கும் சிறக்கும்.
மேற்கண்ட ஆற்றல் மிகவும் அபரிதமாக கிடைப்பதால் வளரும் தேவைகளை நாம் சமாளிக்கமுடியும்.
சூழலுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தான அனல் மின்சாரம், அணுமின்சாரம் உற்பத்திசெய்யத்தேவையே இல்லை என இம்மன்றம் அரசிற்கு பரிந்துரைக்கின்றது..
7.புதிய முறை மின் கொள்கையால் மின்சாரத்தை நீண்ட தொலைவுகளுக்கு கொண்டுசெல்லத்தேவையில்லை.எனவே மின்கம்பி இழப்புகள், மிந்தட போக்குவரத்து நெருக்கடிகள்,அதீத செலவுகள் குறைந்துவிடும்.
மேற்கண்ட திட்ட்த்தை நடைமுறைப்படுத்த தமிழக்த்தில் உள்ள கூடங்குளம்,கல்பாக்கம் திட்டங்களைக் கைவிட்டாலே போதுமானது. .வர இருக்கும் அனல் மின்சார நிலையங்களை தவிர்த்தால் அதற்கு முதலீடு செய்ய இருக்கும் பணத்தைக்கொண்டு தமிழகத்தின் ஏரி,குளங்கள்,நீர்வழிகள் ஆகியவைகளை புனரமைத்து கீழே இறங்கும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் அமுதம்போல் சேமிக்க வழி செய்யலாம். நீராதாரத்திற்கு அரசு செய்யவேண்டிய தற்போதைய பொருட்ச்செலவுகள் தேவையில்லை.

கருத்துரையிடுக