சனி, ஜனவரி 17, 2009

மண்ணை நாம் காப்போம்: மண் நம்மை காக்கும் - புகைப்பட நாடகம்

"பூவுலகின் நண்பர்கள்"அமைப்பின் சார்பில் கடந்த 11-01-09 அன்று சென்னை புத்தகத்திருவிழா அரங்கில் மரபுவழி வேளாண் பொங்கல்விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை லயோலாக் கல்லூரி முதுநிலை ஊடகக்கலை (தமிழ்வழி) மாணவர்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். ஊடகக்கலை துறைத்தலைவர் திரு. அமல்ராஜ் மற்றும் விரிவுரையாளர் திரு அமைதி அரசு ஆகியோரின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கைவண்ணம் இதோ...

ரெடி ஜூட்... ஒன்..டூ..த்ரீ..!


தமிழில் சொல்லுங்க...



சரி. ஒன்று.. இரண்டு.. மூன்று..



என்னது. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செஞ்சுகிட்டாங்களா? தமிழ்நாட்டில்கூட சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செஞ்சுகிட்டதா தேசிய குற்ற ஆவண மையம் சொல்லுதாமே.
அது சரி நாடகத்தோட கதையை சொல்லுங்க...
... விவசாயிகள் விதை தெளிச்சு, நாத்து நடுறாங்க.



இருட்டு நேரத்தில் யாரோ ரெண்டு பேர் திருட்டுத்தனமா நுழையறாங்களே. யார் அது?



ஓ!

பன்னாட்டு வேளாண்மை நிறுவனங்கள்தான் ஆர்ப்பாட்டமா வர்றாங்க போலிருக்கு.




கவர்ச்சியான விளம்பரங்களும், அரசியல்வாதிகள் - அதிகாரிகளை விலைக்கு வாங்கும் தந்திரமும் உலகம் பூரா விவசாயிகளை ஏமாத்துறதுக்கு குறுக்குவழி.



அந்த குறுக்கு வழியை பயன்படுத்தி எல்லா விவசாயிகளையும் மடக்கி...


கோழி அமுக்கா அமுக்கிட வேண்டியதுதான்.
அப்புறம்...

துள்ளிக்குதிக்கிற தவளைகளை...


அமுக்கிப்பிடித்து அதனோட மரபணுவை எடுத்து...


தக்காளிக்குள்ளே புகுத்தினால், தக்காளி கீழே விழுந்தால் நசுங்காது. தவளை தண்ணயிலே இருந்தாலும் அழுகிப்போகாம இருக்கிறது மாதிரி, தக்காளியும் அழுகாம இருக்கும். பார்க்கவும் பளபளன்னு இருக்கும்.


ஆஹா. அறிவியலோட சக்தியே சக்தி.


அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் அறிவியலை பயன்படுத்தி மக்களை பஞ்சத்திலே இருந்து மீட்டுடப்போகுது.


தக்காளியை தவளைத் தக்காளியா மாத்தினமாதிரி கத்தரிக்காயையும் கற்பழிச்சுடலாமா?



அட படுபாவிகளா. தக்காளியான என்னோட இயல்பையே மாற்றிப் போட்டீங்களே. பார்க்க பளபளன்னு இருந்தாலும் ருசி பழைய மாதிரி இல்லை. இயல்பான சத்துகள் இல்லை. அதைவிட முக்கியமான கேள்வி..
நான் சைவமா..? அசைவமா..?



அதெல்லாம் சரி. எங்களோட பூச்சி மருந்து, உரம், மரபணு மாற்றுவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யணும்னா அதற்கான விலையை தரணும் தெரியுமாடா? கடன்கார நாய்களே?


ஐயோ ஊருக்கே சாப்பாடு தயார் செய்கிற விவசாயிகளான நாங்களே கடனை சமாளிக்க முடியாம பசியும், பட்டினியுமா தவிக்க வேண்டிருக்கே.



வேறே வழியே இல்லை. அரசாங்கமும், விவசாய விஞ்ஞானிகளும் சொன்னதை கேட்டு கண்டதையும் போட்டு மண்ணை கெடுத்ததுக்கு எனக்கு இதுதான் சரியான தண்டனை.


அரசாங்கத்தை பொறுத்தவரை இதுவும் சாதாரண புள்ளிவிவரம்தான்.


ஹை ஜாலி. நாங்க வந்த வேலை முடிஞ்சது. இனி இந்தியர்கள் எதை சாப்பிடறாங்க. எப்படி சாப்பிடறாங்க என்பதை எல்லாம் நியூயார்க்-ல இருந்தே முடிவு பண்ணலாம். யார் செத்தா எங்களுக்கென்ன? யார் தாலியறுத்தா எங்களுக்கென்ன?
எங்களுக்கு தேவை லாபம்! கொள்ளை லாபம்!!

****

இந்த நிலையை மாற்றவே முடியாதா?


முடியும்!


நீங்கள் மனது வைத்தால்....

...என்ன செய்யலாம்?

நமது பாரம்பரிய அறிவை மீட்டெடுத்து, இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளையும் காப்பற்றலாம்.


விவசாயிகள் வாழ்ந்தால்தான் மற்ற தொழில் பார்க்கும் அனைவரும் வாழ முடியும்.


எனவே


நாம் அனைவரும்


ஒன்று திரண்டு


பன்னாட்டு பகாசுர வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தால்...


....மட்டுமே விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். விவசாயிகள் காப்பாற்றப்பட்டால்தான் நமக்கு உணவு.


ஏனென்றால் உணவு தானியங்களை தொழிற்சாலைகளிலோ, கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களிலோ உற்பத்தி செய்யமுடியாது. அது நிலத்தில் மட்டும்தான், விவசாயிகளால் மட்டும்தான் உற்பத்தி செய்ய முடியும்.


யோசிப்போமா!

செவ்வாய், ஜனவரி 13, 2009

புத்தகத் திருவிழாவில் பொங்கல் விழா - புகைப்பட செய்தி

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் 11-1-09 அன்று சென்னை புத்தகத் திருவிழா வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன், திரைப்பட இயக்குனர் பீ. லெனின், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், பண்பாட்டு ஆய்வாளர் வெள் உவன், லயோலா கல்லூரி ஊடகக்கலை மாணவர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்விலிருந்து சில புகைப்படத் துளிகள்...

முதலில் வரவேற்பு


கரும்பால் வீடு கட்டுறாங்களோ?


பொங்கல் சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டாங்க! இப்ப கோலம் போட சொல்றாங்க!



இந்த கிழங்கையெல்லாம் பார்த்ததுகூட இல்லை...


என்னம்மா பொங்கல் தயாரா?



இதோ ஆச்சுங்க


இந்த பொங்கல் "தூயமல்லிச் சம்பா" என்னும் பழமையான அரிசியால் சமைச்சதாமே?


வெல்லம்கூட ரசாயனப்பொருட்கள் இல்லாத வெல்லமாம். இங்கே யாருக்கும் சர்க்கரை நோய் இல்லையே? சர்க்கரை நோய் இருந்தா இனி்ப்பு பொங்கல் சாப்பிட முடியாது.


பொங்கலோ பொங்கல்!


சென்னைக்கே இது புதுசு. நான் என் வெளிநாட்டு நண்பர்களுக்காக வீடியோ படம் எடுக்கறேன்.


சீக்கிரம் பொங்கல் குடுங்கப்பா


கலைநிகழ்ச்சி இருக்கிறதா சொன்னாங்களே


மீடியாக்காரங்க பறக்கறாய்ங்க சார்


இந்த பொங்கலோட சிறப்பு என்னன்னா...?


இந்த புத்தகத்தை படித்து தெரி்ஞ்சுக்கோங்க


ஹை... பொங்கல் தயாராயிடுச்சு!



எங்கப்பா "பிபிசி, அல் ஜஸீரா டிவி" எல்லாம் வரலையா?



சர்க்கரை பொங்கல் இனிக்குது. விவசாயிகளின், வியாபாரிகளின் வாழ்வு இனிக்கிறதா?



சிக்கலான கேள்விதான். யோசிச்சுதான் பதில் சொல்ல வேண்டும்.



மேடையில் ஏறினா கையை இப்படி ஆட்டணும், இன்னொரு பக்கம் நாற்காலியை தூக்கிடணும். என்ன சரிதானே!



என்ன பொங்கல் சாப்பிட்டாச்சா? கலை நிகழ்ச்சியை தொடங்கிடலாமா?


ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ..



என்ன செய்றாங்க? ஒன்னும் புரியலையே!



ம்ஹூம். சுத்தமா புரியலை. அடுத்த பதிவுல விவரமா இருக்குதாம். பார்த்துக்கலாம்.


ரசாயன உரங்கள் இல்லாத, பூச்சி மருந்து இல்லாத, மரபணு மாற்றம் இல்லாத பொங்கல் சாப்பிட அனைவரும் வருக!



அரசியல்வாதிங்கதான் நமக்கு அல்வா கொடுக்கறாங்க. இவங்க நல்ல சர்க்கரை பொங்கல் தராங்க. நல்லா இருங்கப்பா.


அமுதம்தான் கிடைக்கலை. பொங்கலாச்சும் சாப்பிடலாம்.


யாரங்கே. இன்னுமோர் பொங்கல் கொண்டுவா. தவறினால் சிரச்சேதம்தான்.


கிடைக்காத அமுதத்தைவிட கிடைத்த சர்க்கரை பொங்கலே மேல்.


செயற்கையான மரபணு மாற்றம் இல்லாத உலகம் படைக்க உறுதிமொழி


நன்றி. நன்றி. நன்றி


புத்தக கண்காட்சியையும் பார்க்கலாம். வாங்க.


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


பி. கு.: கலை நிகழ்ச்சி தனிப்பதிவாக