வியாழன், ஜனவரி 14, 2010

என் பேச்சிற்கு இடையூறு செய்தால் வெளியே தூக்கிப் போடுவேன் - ஜெய்ராம் ரமேஷ்


கோல்​கத்தா,​​ ஜன.​ 13: மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரிக்கு அனு​மதி அளிப்​பது தொடர்​பாக கோல்​கத்​தா​வில் புதன்​கி​ழமை நடை​பெற்ற கருத்​துக் கேட்​புக் கூட்​டத்​தில் சல​ச​லப்பு ஏற்​பட்​டது.​

÷மத்​திய அர​சின் சார்​பில் பங்​கேற்ற சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய​ராம் ரமேஷ் ஆவே​ச​மாக பேசி​ய​தால் கூட்​டத்​தில் அமளி ஏற்​பட்​டது.​

÷த​னது பேச்​சில் குறுக்​கிட்​டுப் பேசி இடை​யூறு செய்​தால் வெளியே தூக்​கிப் போட்​டு​வி​டு​வேன் என்று விஞ்​ஞானி சர்​மாவை பார்த்து அமைச்​சர் ரமேஷ் கூறி​ய​தால் கூட்​டத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​

​ இத​னால் கூட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு பிரி​வி​னர் அமைச்​ச​ருக்கு எதி​ராக கோஷ​மிட்​ட​னர்.​

மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரி​யைப் பற்​றி÷​அ​மைச்​சர் ரமேஷ் விளக்​கிக் கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது கூட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு​வர் அடிக்​கடி குறுக்​கிட்​டார்.​ இத​னால் ஆத்​தி​ர​ம​டைந்த அமைச்​சர் மேடையி​லி​ருந்து மைக்ரோ போனு​டன் கீழி​றங்கி வந்து,​​ நான் பேசு​வதை முத​லில் கேளுங்​கள்.​ அதன் பிறகு உங்​கள் கருத்​தைச் சொல்​லுங்​கள் என்​றார்.​ அடுத்த முறை நீங்​கள் குறுக்​கிட்​டுப் பேசி​னால் வெளியே தூக்கி போட்​டு​வி​டு​வேன் என்று வாயில் கதவை நோக்கி கையை நீட்​டி​ய​வாறு எச்​ச​ரித்​தார்.​ இதை​ய​டுத்து அமைச்​ச​ருக்கு எதி​ராக கோஷம் எழுந்​தது.​ பின்​னர் அமைச்​ச​ரின் பேச்​சில் குறுக்​கிட்ட சர்​மா​வும் பேச அனு​ம​திக்​க​பட்​டார்.

÷கூட்​டத்​தில் பேசிய பலர் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரிக்கு எதி​ரா​கப் பேசி​னர்.​

÷ம​ர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரியை நம் நாட்​டில் அனு​ம​திப்​பது தொடர்​பாக கருத்​துக் கேட்பு கூட்​டம் பெரிய நக​ரங்​க​ளில் நடை​பெ​று​கி​றது.​ அடுத்த கூட்​டம் வரும் 16-ல் புவ​னேஸ்​வ​ரத்​தி​லும் 19-ம் தேதி ஆம​தா​பா​தி​லும் 22-ம் தேதி ஹைத​ரா​பா​தி​லும் 23-ல் ​

பெங்​க​ளூ​ரி​லும் 27-ல் நாக​பு​ரி​யி​லும் 30-ல் சண்​டீ​க​ரி​லும் நடை​பெ​று​கி​றது.​

÷த​மி​ழ​கத்​தி​லும் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​தரி காய்க்கு பலத்த எதிர்ப்பு உள்​ளது.​ தற்​போ​தைய நிலை​யில் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​தரி விதை விற்​ப​னையை தடுக்க முடி​யாது என்று வேளாண் துறை அமைச்​சர் வீர​பாண்டி ஆறு​மு​கம் பேர​வை​யில் கூறி​னார்.

நன்றி: தினமணி, 14-01-10

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Good Pictures. The pictures speaks the attitude of our Hon'ble Minister, even it is not taken now.

கருத்துரையிடுக