செவ்வாய், நவம்பர் 10, 2009

டென்மார்க்கில் டால்பின் மீன்கள் படுகொலை – பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்!

மனிதர்களிடம் நட்புடன் வாழும் ஒரே கடல் வாழ் உயிரினம் டால்பின் மீன்கள்தான். மனிதனிடம் தானாகவே வந்து நட்புறவு கொள்ளும் டால்பின் மீன்கள் பார்ப்பதற்கு அழகானவை மட்டுமல்ல. மிகவும் புத்திசாலியான விலங்கும்கூட.

டால்பின் மீன்கள் அவை வாழும் பகுதியின் சுற்றுச்சூழலின் அளவுகோலாக இருக்கிறது. டால்பின்கள் அதிகம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதாக சூழலியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த டால்பின் மீன்களை பழக்கி பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது.
இன்று இந்த டால்பின் மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காரணமாக இருப்பவன் வழக்கம்போல மனிதன்தான்.

டென்மார்க்கில் உள்ள ஃபாரோத் தீவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டால்பின் மீன்கள் படுகொலை செய்யப்படுகின்றன.
அத்தீவில் உள்ள இளைஞர்கள் முதிர்ச்சி அடைந்ததை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வாக இந்த டால்பின் வேட்டை நடைபெறுகிறது.

இந்த விழா நடைபெறுவதை அறியாமல் மனிதர்களின் நட்பை நாடி அந்த அந்தப்பகுதியில் உலா வரும் டால்பின் மீன்களின் மீது மிகப்பெரிய தூண்டில் போன்ற இரும்புக் கொக்கிகளை வீசி அவற்றை கரைக்கு இழுத்து வருகி்ன்றனர்.

பின் பெரிய கத்திகளைக் கொண்டு அந்த டால்பின் மீன்களை பல துண்டுகளாக வெட்டுகின்றனர்.
வலி தாங்க முடியாத டால்பின் மீன்களின் மரண ஓலம், குழந்தைகள் அழுவதை போலவே இருக்குமாம். ஆனால் வெறியின் உச்சத்தில் இருக்கும் மனிதப்பேய்களுக்கு அந்த ஓலம் காதில் விழுவதில்லை.

பல்லாயிரக்கணக்கான டால்பின்கள் அப்பகுதியில் வெட்டப்படுவதால் அந்தப் பகுதி கடலே, ரத்தக்கடலாக மாறி விடுகிறது.






இதனால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


மேலும் கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சூழல் சீர்கேடால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

டால்பின் மீன் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனினும், ஐந்தறிவு விலங்குகளிடம் (அதுவும் மனிதனை நண்பன் என்று தவறாக கருதும் சாதுவான விலங்கான டால்பின் மீனிடம்) தனது முதிர்ச்சியை காட்டுவதாக நினைக்கும் மனிதர்களின் வெறியாட்டம் ஓயவில்லை.

சூழலை அழிப்பது புவியை அழிப்பதாகும். புவியை அழிப்பது மனிதனை அழிப்பதாகும்.

வீடியோக் காட்சி:


-பூவுலகின் நண்பர்கள்

3 கருத்துகள்:

அகராதி சொன்னது…

கொடுமை.

அகராதி சொன்னது…

கொடுமை

ponnu சொன்னது…

If this kind of barbaric activities continue,definetly Mother Nature shall over ride
Mankind,very shortly.

கருத்துரையிடுக